நாகர்கோவில் மே 1
குமரி மாவட்ட மலைப்பகுதிகளில் மட்டுமின்றி விவசாய நிலங்களிலும், ரப்பர் தோட்டத்தில் இடையிலும் ஊடுபயிராக விளைவிக்கப்பட்டு வரும் அன்னாசி பழம் விவசாயிகளின் உற்ற நண்பனாக விளங்கி வருகிறது. இந்த அன்னாசி பழத்திற்கு வெளி மாவட்டங்களிலும் அண்டை மாநிலங்களிலும் அமோக வரவேற்பு உண்டு. இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு 10 டன் ஏற்றுமதி செய்ய வேண்டிய அன்னாசிப்பழம் தற்போது குமரி மாவட்டத்தில் இருந்து வெறும் 2 டன்னாக கணிசமாக குறைந்துள்ளது இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர், மர சீனி கிழங்கு, கிராம்ப்பு போன்ற பல்வேறு தோட்டங்களில் வேலி பயிராக பயன்படுத்தப்பட்டு வந்த அன்னாசிப்பழம் விவசாயம் அண்மைக்காலமாக வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு விவசாய பயிராக அங்கீகாரம் பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, குலசேகரம், அருமனை, சிற்றார், மணலோடை, கீரிப்பாறை என மாவட்டம் முழுவதும் ஐயாயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் நடந்து வருகிறது அதிக தண்ணீர் தேவைப்படாத இந்த விவசாயம் என்றாலும் கோடைகாலத்தில் தான் இதனுடைய விளைச்சல் மகசூல் அதிகரித்து அதிகமாக ஏற்றுமதி ஆகும் ஒரு ஏக்கருக்கு 12 டன் வரை அன்னாசிப்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் விளையும் அன்னாசிப்பழம் கேரளா சென்னை பெங்களூர் டெல்லி, மும்பை மற்றும் வளைகுடா நாடுகளில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீசனில் மட்டும் 70 டன் அன்னாசிப்பழம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தற்போது ஏற்பட்டுள்ள கோடை வெயிலின் தாக்கத்தால் முக்கிய விவசாய பயிர்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அன்னாசி பழத்தின் விளைச்சலும் கடுமையான பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிலோ 30 ரூபாய் 35 ரூபாய் என சந்தையில் விலைக்கு வந்த அன்னாசிப்பழம் தட்டுப்பாடு காரணமாக கிலோ 80 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.இதனால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். உற்பத்தி குறைவால் 10 டன் ஏற்றுமதி செய்ய வேண்டிய அன்னாசிப்பழம் தற்போது குமரி மாவட்டத்தில் இருந்து வெறும் 2 டன்னாக கணிசமாக குறைந்துள்ளது இதனால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.