களியக்காவிளை, அக். 7 –
களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதி விண்ணூர் பழஞ்சி வீட்டை சேர்ந்தவர் நேசமணி மனைவி உஷா, (50). இவர் இன்று அதிகாலை சமையல் வேலை செய்ய சமையல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கே மறைந்து இருந்த மர்ம திருடன் உஷாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி செயினை அறுத்து கொண்டு தப்பி ஓடியுள்ளார். தாலிச் செயினின் ஒரு பகுதி திருடன் கையில் அகப்பட்டுள்ளது. மீதி பகுதி உஷாவிற்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக உஷா களியக்காவிளை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம திருடனை தேடி வருகின்றனர்.


