திருப்பூர், ஆகஸ்ட் 14 –
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரிதன்யா எனும் இளம்பெண் திருமணம் ஆகி மூன்று மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதனுடைய வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதனை சிபிசிஐடி யிடம் ஒப்படைக்க வேண்டியும் வழக்கு விசாரணையை எந்த ஒரு பாரபட்சம் இல்லாமல் நேர்மையுடன் நடைபெற வேண்டியும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஹிந்து பாரத் சேனா சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் குமார் தலைமையிலும் ஹிந்து திராவிட கட்சி நிறுவனர் ரமேஷ் பாபு முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் மாநில அமைப்பாளர் நாகராஜ், மாநில செயலாளர் பாலு, மாவட்ட செயலாளர் ஜெய் மணி, மாநகர் மாவட்ட தலைவர் செல்வராஜ், அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் கதிர், தொழிற்சங்க தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



