விளாத்திகுளம், செப்டம்பர் 13 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பெத்தனாச்சி அம்மன், ஸ்ரீ முனியசாமி, ஸ்ரீ பெருமாள்சாமி, ஸ்ரீ அய்யனார் திருக்கோவில் ஆவணி மாத கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சின்னமாட்டு வண்டி, பூஞ்சிட்டு மாட்டுவண்டி என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, தேனி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 77 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
சின்ன மாட்டு வண்டி பந்தயத்திற்கு போக வர தூரம் 6 மைல் தூரமும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிகள் பந்தயத்திற்கு போகவர 5 தூரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை சாலையின் இரு புறமும் நின்று பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.



