விளாத்திகுளம், அக்டோபர் 31 –
தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆனையின்படி கோவில்பட்டி சுகாதாரம் மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களின் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் வட்டாரம் விளாத்திகுளம் பகுதியில் பொது சுகாதாரத்துறை பேரூராட்சி மற்றும் காவல்துறை ஒருங்கிணைந்த புகை மற்றும் புகையிலை தடைச் சட்டம் சோதனை நடத்தப்பட்டது.
இதில் பொது சுகாதாரையில் இருந்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் பேரூராட்சியில் இருந்து செயல் அலுவலர், துப்புரவு ஆய்வாளர் மற்றும் காவல்துறையிலிருந்து தலைமை காவலர் கலந்து கொண்டனர்.
இதில் விதிகளை மீறி பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு, பள்ளிக்கு அருகாமையில் உள்ள கடைகளில் புகையிலை விற்றவர்களுக்கு பொது சுகாதாரத்துறை சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது.



