திருச்சி, ஏப். 20 –
திருச்சி கிழக்குத் தொகுதியில் நேற்று (ஏப். 19) தவெக தலைவர் விஜய் திறந்தவெளி வாகனத்தில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் மேற்கொண்டார். வழிநெடுகிலும் தொண்டர்கள் மலர் தூவியும், கட்சித் துண்டுகளை வீசியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது கூட்டத்திலிருந்து வீசப்பட்ட கூல்ட்ரிங்க்ஸ் பாட்டில் ஒன்று எதிர்பாராதவிதமாக விஜய்யின் தலையில் பட்டது. இதனால் அவர் தலையில் கைவைத்தபடி கூட்டத்தைப் பார்த்த சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து கிழக்கு தொகுதியில் சாலைவலம் மேற்கொண்டு பரப்புரை செய்த விஜய் மும்மத வழிபாடு செய்த நிலையில் ஒரு வார்த்தை கூட பேசாமல் பரப்புரையை முடித்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டார். 3 இடங்களில் பேச போலீசார் அனுமதி கொடுத்த நிலையில் அவர் பேசாமல் புறப்பட்டு சென்றது தவெக தொண்டர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.



