வேலூர், செப். 15 –
வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விசுவநாதன் பேத்தி காதம்பரி எஸ். விசுவநாதன் திருமண நிகழ்வில் ஆந்திர பிரதேச ஆளுநர் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விசுவநாதன் பேத்தியும், உதவி துணைத் தலைவருமான காதம்பரி எஸ். விசுவநாதன் – டாக்டர் ஏ. ஷ்ரவன் கிருஷ்ணா ஆகியோரின் திருமணம் திருப்பதியில் இன்று நடைபெற்றது.
ஆந்திர பிரதேச மாநில ஆளுநர் எஸ். அப்துல் நசீர் மற்றும் அவரது மனைவி சமீரா நசீர் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்கள் காதம்பரி எஸ். விசுவநாதன் – டாக்டர் ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா ஆகியோரை வாழ்த்தினர்.
திருமண நிகழ்வில் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விசுவநாதன், துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி. செல்வம் மற்றும் ரமணி பாலசுந்தரம், சந்தியா பென்டரெட்டி, அனுஷா செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



