நாகர்கோவில், அக்டோபர்7 –
வடசேரி கிருஷ்ணன்கோவில் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ரகுபாலன் (30). அவரது மனைவி அபிஷா (28). ரகுபாலன் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மனவிரத்தி அடைந்த ரகுபாலன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வடசேரி போலீசில் அபிஷா புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


