குளச்சல், ஆக. 6 –
ரீத்தாபுரம் பேரூராட்சி பகுதியில் மனமகிழ் மன்றம் என்னும் பெயரில் தனியார் மதுபான கடை அமைக்க முயற்சி நடந்து வருகிறது. இதை எதிர்த்து அனைத்து கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சி சார்பில் பேரூராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி தலைவர் எட்வின் ஜோஸ் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட அனைவரும் உள்ளிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸ், பாலப் பள்ளம் பேருராட்சி தலைவர் டென்னிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மனமகிழ் மன்றம் திறப்பதில்லை என்று அதிகாரிகள் உறுதி தர வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றனர்.
இதையடுத்து இன்று கல்குளம் தாசில்தார் அருள் ஹெனி பேருராட்சி அலுவலகம் சென்று போராட்ட கார்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மன மகிழ் மன்றம் அமைக்க அரசு அனுமதி வழங்காது எனவும், இது குறித்த விபரம் உடனடி அறிவிக்கப்படும் என்றார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.



