மார்த்தாண்டம், நவ. 3 –
முஞ்சிறை ஒன்றிய அதிமுக இளைஞர் பாசறை தலைவர் தலைமையில் அதிமுக கட்சியில் இருந்து விலகி பலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
மெதுகும்மல் ஊராட்சி அதங்கோடு பகுதியை சேர்ந்த முஞ்சிறை ஒன்றிய அதிமுக இளைஞர் பாசறை தலைவர் ஜோயல் சிங், ஜஸ்டின் ராஜ், ஷீஜா, திவ்யா, சந்தோஷ், ஜெயசிங், ராஜ் ஆகியோர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த அனைவருக்கும் எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்று காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் அட்டை வழங்கினார்.
இந்த இணைப்பு விழா நிகழ்ச்சியில் முஞ்சிறை வட்டார தலைவர் விஜயகுமார், சூரியகோடு கிளை காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷாஜி, மெதுகும்மல் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், குளப்புறம் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில் குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் சபரிகுமார், ராஜேஷ், பகவத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



