கிருஷ்ணகிரி: ஆக. 26:
ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) சார்பில் 25.08.2026 காலை 11 மணிக்கு மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், ஆந்திர மாநிலத்தைப் போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதம் ரூ.6,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், அரசு உத்தரவு பெற்றும் இதுவரை மாற்றுத்திறனாளி உதவித்தொகை கிடைக்காமல் காத்திருப்பவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சங்கத்தினர் வலியுறுத்தினர்.



