மதுரை, செப். 17 –
மதுரை விமான நிலையத்தில் விமானப் பயணிகள் சேவை தினத்தை முன்னிட்டு
டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த இண்டிகோ விமான பயணிகளை வரவேற்கும் விதமாக மதுரை விமான நிலையத்தில் வருகை தந்த பயணிகளுக்கு திலகமிட்டு பாரம்பரிய கலாச்சாரமிக்க பரதநாட்டியத்துடன் செல்பி பாயிண்ட் புகைப்படத்துடன் பயணிகளை விமான நிலைய இயக்குனர் முத்துகுமார், மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி கமாண்டர் கமல்சிங், விமான நிலைய பயண முனைய மேலாளர் உள்ளிட்டோர் பங்கேற்று பயணிகளை வரவேற்றனர்.
இந்திய அளவில் விமான பயணங்களை மேம்படுத்தவும், சுற்றுலா தளங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் விமான பயணிகள் சேவை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை விமான நிலையத்தில் பயணிகள் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மேலும் இதன் தொடர்ச்சியாக மதுரை விமான நிலைய வளாகத்தில் பயணிகளால் மரக்கன்று நடும் நிகழ்ச்சியும், இதனைத் தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு இரத்ததான முகாமும் பள்ளி மாணவர்களுக்கு விமான நிலையம் குறித்தும் எடுத்துரைக்கும் முயற்சியும், பயணிகளுக்கு வினாடி வினா, ஓவிய போட்டிகளும் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.



