மதுரை, ஜூலை 3 –
எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர்/மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் (DISHA) நடைபெற்றது.
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அ.கல்லாணை , மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். தங்கப்பாண்டி , மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சோ.கார்த்திகேயன்,
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி.கருப்பையா, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.கோபிசன், மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் மதார் பதூருதின், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ம.விஜய், மாநகராட்சி மேயர் (பொ)/துணை மேயர் தி.நாகராஜன், மாநகர காவல் ஆணையாளர் எஸ்.ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.



