மதுரை, அக். 14 –
மதுரை தெப்பக்குளம் தியாகராசர் நன்முறை மேனிலைப் பள்ளியில் செந்தமிழ்ச் செல்வர் கருமுத்து தி. மாணிக்கவாசகம் நினைவு நாளை முன்னிட்டு மாணவர்களுக்கான பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் பொறுப்புத் தலைமையாசிரியர் அறிவழகன் தலைமை தாங்கினார். பள்ளியின் முன்னாள் மாணவரும் இந்நாள் மதுரை வடக்கு சரகம் போக்குவரத்துப் பிரிவு காவல் உதவி ஆணையர் த. இளமாறன் முன்னிலை வகித்தார்.
விழாவில் பள்ளியின் தமிழாசிரியர் கார்த்திக் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன் பிறகு மாணவர்களின் திறமைக்கேற்ப பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து சிந்தாமணி ஆச்சி நினைவு நாள் சிறப்புச் சொற்பொழிவு
ஆற்றினார்கள்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் மதுரை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன் பள்ளியின் பசுமைக்கால நினைவுகளைப் மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார். அதன் தொடர்ச்சியாக இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்த திலகர் திடல் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் அ. தங்கமணி
பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறளைச் சுட்டிக்காட்டி மாணவர்கள் வாழ்வில்
உயர்வதற்கான பல வழிவகைகளை நகைச்சுவையுடன் வழங்கினார்.
இந்த போட்டிகளில் பங்கேற்க மதுரையைச் சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட பள்ளியிலிருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுப் புத்தகங்களும் கேடயங்களும் வழங்கப்பட்டன. அதிக புள்ளிகள் பெற்று மகாத்மா சிபிஎஸ்சி பாபா பில்டிங் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்தக்
கேடயமும் பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தமிழாசிரியை கார்த்திகேஸ்வரி, தமிழாசிரியர்கள் சாந்தி,
சரவணன் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.



