மதுரை, ஆகஸ்ட் 16 –
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் திருவாச்சி மண்டபத்தில் துவங்கி சன்னதி முழுவதும் பெண்கள் கலந்து கொண்டு
1008 திருவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் நல்ல மழை பெய்ய வேண்டியும் வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.



