குளச்சல், நவ.27 –
மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு மகள் சரண்யா (22). இவர் வெள்ளமோடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சரண்யா கல்லூரியில் செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ தினம் சுரேஷ் பாபு வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீடு வந்து பார்த்த போது மகளை காணவில்லை. அவரை எங்கு தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து சுரேஷ் பாபு மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.


