நாகர்கோவில், ஜூலை 27 –
கன்னியாகுமரி மாவட்ட வன உயிரின காப்பாளர் அன்பு உத்தரவின் பேரில், கன்னியாகுமரி வன உயிரின சரணாலயம் மற்றும் உதவி வன பாதுகாவலர் ஸ்ரீ வல்சன் அறிவுறுத்தலின்படி, மேலும் பூதப்பாண்டி வன சரகம் அலுவலர் அன்பலகன் வழிகாட்டுதலின் கீழ், அரல்வாய்மொழி வனவர் மணிகண்டன், கோவளம் வனக் காவலர் முத்துலட்சுமி மற்றும் களப்பணியாளர்களின் ஏற்பாடுகளுடன், உலக மாங்குரோவ் தினம் 2026 நேற்று மணக்குடி மாங்குரோவ் தளத்தில் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாங்குரோவ் நடவு, மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள், மாங்குரோவ் வாழ்விட சுத்தம் செய்தல், மற்றும் மாணவர்களுக்கான கல்வி களப்பயணங்கள் ஆகியவை இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கிராம மாங்குரோவ் குழு தலைவர் ரீகன் மற்றும் உறுப்பினர்கள், சிலுவை வாஸ்தியன், ப்ரொவிஷன் என்ஜிஓ பிரதிநிதிகள், உள்ளூர் பஞ்சாயத்து பணியாளர்கள், மற்றும் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை சுதாமதி (என்ஜிஓ) ஒருங்கிணைத்தார். மேலும் அனைத்து கள ஏற்பாடுகளும் பூதப்பாண்டி வன சரக களப்பணியாளர்களால் செய்யப்பட்டன.



