புதுக்கடை, நவ. 1 –
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு புதுக்கடையில் தியாகிகள் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இன்று குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்து 70-ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு, இந்த நினைவு ஸ்தூபிக்கு மலர் மாலை அணிவித்து தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. கிளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் கலந்து கொண்டு தலைமை தாங்கி தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு மலர் மாலை அணிவித்து, வீரவணக்கம் செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால், நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், வட்டார காங்கிரஸ் தலைவர் ரகுபதி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் பால்ராஜ், ஷேக் முகமது, மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சாஜன், புதுக்கடை நகர காங்கிரஸ் தலைவர் ஏசுராஜ், இனயம்புத்தன் துறை காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின் மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.



