மயிலாடுதுறை, செப். 20 –
நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியும் மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் மாவட்ட பொருளாளர் சித்ரா முத்துக்குமார், மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர் மருத்துவர் சிவகுமார் முன்னிலையில் நடைபெற்றது. இம்முகாமில் 50க்கு மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் வருகை தந்து இரத்த தானம் செய்தனர். தொடர்ந்து இரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இம்முகாம் ஏற்பாடுகளை முன்னாள் நகர தலைவர் வினோத், இளைஞரணி சாய்சம்பத், நரசிம்மன் ஆகியோர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.



