செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழமத்தூர் கிராமத்தில் இளைஞர்கள் நடத்தும் மின்னொளி கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது, இதில் செங்கல்பட்டு முழுவதும் உள்ள 50 க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் மகளிர் அணியினர் இணை செயலாளர் செயற்குழு உறுப்பினர் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குமரன் மாநில வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு நாணயம் ஸ்லைடர் சுண்டிவிட்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற அணியினருக்கு முதல் பரிசை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். இந்நிகழ்வின் போது சட்ட ஒன்றிய அவைத் தலைவர் ஒன்றிய பொறுப்பாளர்கள் கிளை நிர்வாகிகள், மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.



