பர்கூர், ஏப்ரல் 23 –
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தே.மதியழகன் அவருடைய சொந்த ஊரான குட்டூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது குடும்பத்தினருடன் வந்திருந்து தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார்.
தொடர்ந்து பர்கூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளை காலை ஏழு மணி முதல் கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யப்பட்ட முன்னேற்பாடுகள் குறித்து கேட்டு தெரிந்து கொண்ட வேட்பாளர் மதியழகன் தொடர்ச்சியாக, சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைவரும் ஜனநாயக கடமை ஆற்றி, வாக்குப்பதிவு அதிகரிக்க கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.



