களியக்காவிளை, அக். 15 –
படந்தாலுமூட்டில் கார் மீது மோதிய கேரளா அரசு பஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கருங்கல் காற்றாடி விளை பகுதியை சார்ந்தவர் வில்பர்ட் டேனியல் மகன் வினோத் டேனியல் (29). இவர் சம்பவத்தன்று மார்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளைக்கு தனது காரில் சென்று கொண்டு இருந்தார். கார் படத்தாலு மூடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது பின்னால் வேகமாக வந்த கேரளா அரசு பஸ் மோதி கார் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து வினோத் டேனியல் களியக்காவிளை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


