ராமநாதபுரம், ஆக. 15 –
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி தமுமுக மமக அலுவலத்தில் 79 வது சுதந்திர தின விழா தமுமுக துணை தலைவர் அலாவுதின் தலைமையில் நடைபெற்றது. மமக செயலாளர் பரக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். திருவாடனை வட்டார ஜமாத் செயலாளர் ஓய்வுபெற்ற விஏஓ பாருக் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக்பாட்சா சுதந்திர தின உறுதி மொழி கூறினார்.
நம் தாய் நாடு தனது 79 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்நன்னாளில் நமது நாட்டிற்கு விடுதலையும் ஜனநாயக குடியரசையும் வழங்கத் தங்கள் உயிரையும் கொடுத்த எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களை நாம் நினைவு கூறுகிறோம். இந்த விடுதலை திருநாளில் சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு சட்ட உரிமைகளை பாதுகாக்கவும் ஆட்சியில் வெளிப்படுத்த தன்மை மற்றும் பொறுப்புணர்வை உத்தரவாதப்படுத்தவும் கருத்து சுதந்திரம் மற்றும் நியாயத்திற்காக போராடும் உரிமையை பாதுகாக்கவும் ஒவ்வொரு குடிமகனின் வாக்கும் சமமாகவும் நியாயமாகவும் எண்ணப்படும் தேர்தல் முறையை வலுப்படுத்தவும் அனைத்து மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும் உறுதி எடுப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தொண்டி ஜமாத்தில் உலாமா நிர்வாகி ஓடாவி தெரு ஜமாத் ஆலிம் ஜமால் ஹாசிபி தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவுபடுத்தி பேசினார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி, தமுமுக மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமிது, கவுன்சிலர் பெரியசாமி ஆகியோர் உரை நிகழ்த்தினர். ஊடக அணி நிர்வாகி பஹ்ருல்லாஹ், ஜமாத்துல் உலமா நிர்வாகிகள் அப்துல் பாசித் ஹாசிபி இம்தாதுல்லா ஹாசிபி, தெற்கு தெரு நிர்வாகி ஆலிம் ராசிக் அலி மற்றும் ஜான்பாய், தொண்டி கிழக்குத் தெரு ஜமாத் தலைவர் ஹாலித் மற்றும் நிர்வாகிகள் தொண்டி ஓடாவி தெரு ஜமாத் துணைத் தலைவர் அக்பர் சுல்தான், சகுபர் அலி, மரைக்காயர் தெரு நிர்வாகி நிஸார் இப்ராஹிம் நம்புதாளை சேகு நைனா, தமுமுக மமக நிர்வாகிகள் ரிஸ்வான், ஹம்மாது, அப்துல்லா, பவுசுல் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 50 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தமுமுக தொண்டிச் செயலாளர் முகமது மைதீன் நன்றி கூறினார்.



