தஞ்சாவூர், ஏப்ரல் 23 –
தஞ்சாவூர் மாவட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஒரே நாளில் பத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாப்பா நாடு போலீஸ் நிலையம் சங்கரநாதர் குடிகாடு, ஆம்லாபட்டு, பட்டுக் கோட்டை தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கரம்பயம், வாட்டாத்திக்கோட்டை, நடுக்கா வேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நடுக்காவேரி, தஞ்சாவூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சூரியம்பட்டி, ஒரத்தநாடு, தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி, சுவாமிமலை போலீஸ் நிலையம் உள்ப்பட 10 இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தேர்தல் விதிமுறைகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டது தங்கும் விடுதிகளில் தங்கியிருந்து என 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


