சுசீந்திரம், ஜுன் 25 –
சுசீந்திரம் அருகே உள்ள கற்காடு சிவா நகரைச் சார்ந்தவர் காவியா (24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் எம் எஸ் சி பட்டதாரி ஆவார். இவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று தலைவலி தீராத மனவிரக்தியில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று தனது வீட்டில் மரம் அறுக்கும் கட்டிங் மிஷினை எடுத்து தனது கழுத்தை தானே அருத்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது தந்தை பால்பாண்டி (59) சுசிந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


