திருப்பூர், ஜூன் 25 –
திருப்பூர் மாநகர காவல்துறையில் காலியாக இருந்த வடக்கு மற்றும் தெற்கு பிரிவுகளுக்கான போலீஸ் துணை கமிஷனர் பணியிடங்களுக்கு இரண்டு உயர் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவின்படி மதுரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.,யாகப் பணியாற்றி வந்த ரமேஷ் கிருஷ்ணன், திருப்பூர் மாநகர வடக்கு பிரிவு போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் நாமக்கல் மாவட்ட சப்-டிவிஷன் உதவி எஸ்.பி., யாக பணியாற்றி வந்த ஆகாஷ் ஜோஷி பதவி உயர்வு பெற்று, திருப்பூர் மாநகர தெற்கு பிரிவு போலீஸ் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேலும் பலப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள இவ்விரு புதிய துணை கமிஷனர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வடக்கு மற்றும் தெற்கு பிரிவுகளில் விரைவில் பொறுப்பேற்க உள்ளனர்.


