திருப்பத்தூர், ஜூன் 17 –
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 1435 ஆம் பயிராண்டு 2025 – 2026 விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய்த் தீர்வாயம் நிறைவு விழா நடைபெற்றது.
இவ்விழாவானது ஆறு நாட்கள் நடைபெற்ற நிலையில் 1065 மனுக்கள் பெறப்பட்டு அவ்வப்போது பரிசோதனை செய்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் 127 பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் நலத்திட்டங்களை வழங்கினார். வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகள் துறை, மருத்துவத்துறை, வேளாண்மைத் துறை, சமூக நலத்துறை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கண்ணன், வட்டாட்சியர் நவநீதம் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்து துறை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.



