திருச்சி, ஏப். 20 –
திருச்சி திருவானைக்காவல் மேம்பாலத்தில் குப்பைகள் ஏற்றிச் சென்ற சிறியரக வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், குப்பை சேகரித்த தனியார் ஒப்பந்த ஊழியர்கள் அலறியடித்து கீழே இறங்கி ஓடினர். தீயை அணைக்க முயன்றும் பலனளிக்காததால், வாகனம் முழுவதுமாக எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், தீ விபத்து குறித்து ஸ்ரீரங்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



