திருச்சி, ஜுன் 5 –
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரவீன் சக்கரவர்த்தி பதிவுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர்கள் அந்தக் கூட்டணியில் இல்லை என்றும் தெரிவித்தார்.
பா.ஜ.க ஆட்சிக்கு வருவதைத்தடுக்க மட்டுமே த.வெ.க-விற்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக ஏற்கனவே மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்த நிலைப்பாடு இன்றும் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.



