சேலம், ஜூன் 13 –
“திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் என்றைக்கும் இணைந்தே செயல்படும்” என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஒரு சிலர் வருவார்கள், போவார்கள். ஆனால் நிரந்தரமாக இருப்பது திமுகவும், திராவிடர் கழகமும் தான். திமுகவை அழித்தே தீருவோம் என்று கூறியவர்களைக்கூட வரவேற்கும் மனப்பான்மை கொண்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தவறாக விமர்சித்து பேசுபவர்களைக்கூட வாழ வைக்கும் இயக்கம் திமுக” என்று கூறினார்.



