தருமபுரி, ஏப்ரல் 22 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 23 ஏப்ரல் 2026 அன்று நடைபெறுவதையொட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு சாவடிகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள், தேர்தல் நுண் பார்வையாளர்கள் மற்றும் காவலர்கள் நியமனம் செய்யும் பொருட்டு இறுதி கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி சம வாய்ப்பு முறையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் ஹீராலால், வந்தனா வைத்யா, காவல் பார்வையாளர் குல்வந்த்சிங் ஆகியோர் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் சதீஷ் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலசுந்தரம், தேர்தல் வட்டாட்சியர் அன்பு உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



