தென்காசி, ஜூன் 19 –
வரும் 22ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட இருப்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் அவர் நலமுடன் வாழ சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல் தென்காசியிலும் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் பண்பொழி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு திருமலைக் குமாரசுவாமி திருக்கோவிலில் தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் ஜே.ஏ.எஸ்.ராஜபிரகாஷ் தங்கத் தேர் இழுத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். அப்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் படத்தை வைத்துக்கொண்டு கோவிலை சுற்றி வந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நீண்ட ஆயுள் பெற வேண்டும் என்றும் வரும் காலங்களில் மீண்டும் அவர் முதலமைச்சராக இருந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என வேண்டி தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தவெக முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



