தஞ்சாவூர், ஜூன் 20 –
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் பல்வேறு வளர்ச்சி திட்டம் பணிகளை கலெக்டர் ரேவதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீச்சல் குளம், ஆக்கி விளையாட்டு மைதானம், ஸ்கேட்டிங் ரிங், கூடைப் பந்து ஆடுகளம், இறகு பந்து ஆடுகளம், பல்நோக்கு விளையாட்டு அரங்கம், கைப்பந்து ஆடுகளம், நவீன உடற்பயிற்சி கூடம், டென்னிஸ் ஆடுகளம், பளுதூக்குதல், கூடம் திறந்த வெளி குத்துச்சண்டை வளையம் மற்றும் பல்வேறு விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் நிலுவையில் உள்ள பராமரிப்பு பணிகளை விரைவாக வும், தரமாகவும், முடித்து தரும்படி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் செந்தில் குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.



