நாகர்கோவில், டிச. 15 –
டிசம்பர் 24-ல் இந்திய அஞ்சல் துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர், செந்தில் குமார் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 24.12.2025 அன்று 10.30 மணியளவில் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. அஞ்சல் துறை சார்பில் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
இதில் பார்சல், மணியார்டர், விரைவுத் தபால் சேவைகள் குறித்த குறைகள் தாமதமான விநியோகம், சேவையில் குறை, தொலைந்துபோன பார்சல்கள், மணியார்டர் பெறுவதில் சிக்கல் போன்ற புகார்கள். நேரில் தெரிவிக்கலாம்; இதற்கு உரிய தேதியில், உரிய இடத்தில், தேவையான ஆவணங்களுடன் (பதிவு எண், முகவரி) மனு அளிக்க வேண்டும்; இதில் வாடிக்கையாளர்களின் புகார்கள் நிவர்த்தி செய்யப்படும். மேலும் தங்கள் குறைகளை தபால் மூலமாக அனைத்து விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.
தபால் உறையின் மீது முன்பக்க மேல்பகுதியில் ‘தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் – டிசம்பர் 2025’ என்று தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். புகார் மனுக்கள் வந்து சேரவேண்டிய கடைசிநாள் 22.12.2025 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



