ஈரோடு, ஜூலை 14 –
சென்னிமலை காப்புக் காட்டை ஒட்டியுள்ள பகுதியில் வளர்ப்பு நாய்களின் சடலங்கள் பகுதியளவு உண்ணப்பட்ட இரண்டு சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சம்பவங்கள் சிறுத்தைகளால் நடைபெற்றதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக தகவல் கிடைக்கப்பட்டு வனத்துறை மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆங்காங்கே தானியங்கி கேமரா பொறுத்தப்பட்டும் தெர்மல் டிரோன் மூலமாகவும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சென்னிமலை 430 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ஒரு சிறிய குடியிருப்புப் பகுதியில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் இப்பகுதியில் சிறுத்தைகள் எதுவும் காணப்படவில்லை. சிறுத்தைகள் புதிய பகுதிகளை ஆராய்வதற்காகவோ அல்லது அவற்றின் எல்லையை விரிவுபடுத்துவதற்காகவோ அல்லது புதிய வாழ்விடங்களைத் தேடி நீண்ட தூரம் பயணிப்பதாக அறியப்படுகிறது. எனவே சிறுத்தைகள் பெரும்பாலும் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் பெரிய வனப்பகுதிகளுக்கு இடையில் நகரும் போது சென்னிமலை காப்புகாட்டிற்கு வருகின்றன.
சென்னிமலை காப்புகாடு ஒட்டியுள்ள கைவிடப்பட்ட குவாரிகள் பெரும்பாலும் பாறை நிலப்பரப்பு, குகைகள் மற்றும் பிளவுகளைக் கொண்டுள்ளன. சிறுத்தைகள் ஓய்வெடுக்கவும் ஒளிந்து கொள்ளவும் பாதுகாப்பான இடங்களாக உள்ளன. மேலும், இந்த கைவிடப்பட்ட குவாரிகள் சிறிய பாலூட்டிகள், பறவைகள் மற்றும் கால்நடைகள் போன்ற இரை விலங்குகளை ஈர்க்கின்றன. இதனால் அவை சிறுத்தைகளை கவரக்கூடிய வேட்டை இடங்களாக அமைகின்றன.
சிறுத்தைகள் பொதுவாக கூச்ச சுபாவமுள்ளவை. எளிதில் கண்டுபிடிக்க முடியாதவை. மனிதர்கள் மீதான தாக்குதல்கள் அரிதானவை. சிறுத்தைகள் உயரம் குறைவாக உள்ள பிற உயிரினங்கள் மற்றும் குழந்தைகளை இரையாக தவறாக நினைக்கலாம்.
ஊர் மக்கள் அடர்ந்த புதர் மண்டிய உள்ள பகுதிகளில் குறிப்பாக இருட்டிற்குப் பிறகு தனியாக நடப்பதைத் தவிர்க்கவும். குழந்தைகளுக்கு குறிப்பாக அந்தி சாயும் நேரத்திற்குப் பிறகு தனியாக வெளியே செல்ல வேண்டாம். எப்போதும் பெரியவர்களுடன் செல்லவோ அல்லது குழுக்களாக நடந்து செல்ல வேண்டும். கால்நடைகள் மற்றும் பிற வீட்டு விலங்குகளை பாதுகாப்பான அடைப்புகளில் வைக்கவும். குறிப்பாக இரவில் அருகிலுள்ள திறந்தவெளி வனப்பகுதிகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளைப் பாதுகாக்க உலோகத்தால் பதிக்கப்பட்ட தோல் காலர்களைப் பயன்படுத்த வேண்டும். வயல்களில் குறிப்பாக இரவில் வேலை செய்யும் போது எச்சரிக்கையாக இருங்கள். விளக்குகள், சத்தம் எழுப்பும் சாதனங்களைப் பயன்படுத்தவும் அல்லது குழுக்களாக வேலை செய்ய வேண்டும்.
சிறுத்தைகள் மறையும் இடங்களை குறைக்க குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைச் சுற்றியுள்ள புதர்கள் மற்றும் தாவரங்களை அகற்ற வேண்டும். சிறுத்தைகளை பொதுமக்கள் அணுகவோ, தூண்டவோ அல்லது பிடிக்க முயற்சிக்கவோ கூடாது. வனத்துறை ஏற்பாடு செய்யும் விழிப்புணர்வு திட்டங்களில் உள்ளூர் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும். மேலும், வனத்துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்ற வேண்டும் .
சிறுத்தை நடமாட்டம் தென்பட்டால் பொதுமக்கள் வனச்சரக அலுவலர் 63694 85335, வனவர் 86677 60565, காப்பாளர் 99435 72298 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் என்று வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.