சுசீந்திரம், ஏப். 9 –
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தளவாய்சுந்தரம், சுசீந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.
சுசீந்திரம் விநாயகர் கோயிலில் தரிசனம் செய்த பின்னர் மேலரதவீதி, ஆஸ்ரமம், கரியமாணிக்கபுரம், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகன மற்றும் நேரடி பிரச்சாரம் நடத்தினார். பல இடங்களில் பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் அவரை வரவேற்றனர்.
பிரச்சாரத்தில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் செல்வகுமார் இணைந்து ஆதரவு திரட்டினார். மின் கட்டணம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து வாக்கு கோரினார். பொதுசேவைகள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.



