சுசீந்திரம், அக். 20 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பிரதோஷம் நாள்தோறும் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதுபோல நேற்று சனி பிரதோஷம் என்பதால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க அங்கி சாத்தப்பட்டது. மாலை 5 மணிக்கு கோவில் சுற்று பிரகாரத்தில் உள்ள கைலாச சன்னதியில் சிறப்பு அபிஷேகம் இரவு 7 மணிக்கு கோவில் சுற்று பிரகாரத்தில் உள்ள விளக்குகள் அனைத்தும் ஏற்றப்பட்டது.
பின்பு அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் சிவனும் கருட வாகனத்தில் பெரும்பாளும் அமரச் செய்து மேளதாளங்கள் முழங்க மூன்று முறை ஸ்ரீ பலி நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதுபோல தாணுமாலய சுவாமி கோவில் அருகே உள்ள பேரம்பல நடராஜர் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது.



