சுசீந்திரம், நவ. 27 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 12 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்களை மூன்று மாதத்திற்கு ஒரு முறை திறந்த எண்ணப்படுவது வழக்கம். இன்று காலை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி துணை ஆணையர் தங்கம் முன்னிலையில் 12 உண்டியலும் திறந்து என்னும் பணி நடைபெற்றது.
மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் கோவில் ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர் அவர்களுடன் கோவில் மேலாளர் ஆறுமுகதரன் கணக்கர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர் 12 உண்டியல் வருவாயாக ரூபாய் 23,94,919 ம், 8 கிராம் தங்கம், 81 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைத்துள்ளன.


