சங்கரன்கோவில், ஜூன் 7 –
தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ராஜபாளையம் சாலையில் உள்ள ஈத்கா திடலில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர். தொடர்ந்து தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களை திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சென்று சந்தித்து பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வின்போது சங்கரன்கோவில் நகரச் செயலாளர் பிரகாஷ், ஜமாத் முன்னாள் செயலாளர் முகமது அயூப், திமுக நகர துணைச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அன்சாரி, ராயல்கார்த்தி, திமுக மூத்த உறுப்பினர் சாகுல் ஹமீது, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் அபூபக்கர், செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி செய்யதுஅலி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அப்பாஸ், மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அப்துல் காதர், சுப்புலாபுரம் கிளைச் செயலாளர் அருளானந்தம், நகர வர்த்தக அணி ரகுமான், நகர இளைஞரணி ஜான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பீர்மைதீன், நகர சிறுபான்மையினர் அணி ஜிந்தா மைதீன் மற்றும் விக்னேஷ், மாதேஷ், ஜெயக்குமார், பாலாஜி, மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.