நாகர்கோவில், நவம்பர் 6 –
கோவையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாகர்கோவில், வேப்பமூடு பூங்கா முன்பு பாஜ மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி ராணி ஜெயந்தி தலைமை வைத்தார். மேற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் கலா கோபாலகிருஷ்ணன் முன்னிலை வைத்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் உமாரதி ராஜன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் சத்யா ஸ்ரீ, மகளிர் அணி பொதுச் செயலாளர் திவ்யா, அனுசியா, தேவி, ஷீபா, விஜயராணி, கவுன்சிலர் ரோஸிட் டா உட்பட நிர்வாகிகள் பேசினார். கிழக்கு மாவட்ட பா. ஜனதா தலைவர் கோபகுமார், பொருளாளர் முத்துராமன், கவுன்சிலர்கள் சுனில், ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



