கோவை, ஏப்ரல் 30 –
கோவை அரிமா சங்கம் சார்பில் கண்ணப்ப நகர் சங்கனூர் சாலையில் உள்ள ஆர்.கே திருமண அரங்கில் கவிஞர் பொன்சிங் எழுதிய ஆற்றோரத்தில் ஓர் அத்திமரம் நூலை அரிமா சங்கத்
தலைவர் அரிமா பி.அமுல்தாஸ் வெளியிட முதல்நூலை அரிமாமுத்து ஆர்.பழனிசாமி பெற்றுக்கொண்டு புத்தகத்தின் சிறப்புரையாற்றினார்.
கவிஞர் பொன்சிங் புத்தகத்தில் உள்ள கதைகளை சொல்லி விளக்கி ஏற்புரை ஆற்றினார். செயலர் அரிமா பி.கே.எல்.சுரேஷ் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி உரையாற்றினார்.



