குளச்சல், ஏப். 24 –
குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடதட்டுவிளை புனித அலோசியஸ் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண் 288ல் நேற்று வில்லுக்குறி பகுதி நுள்ளிவிளை என்ற இடத்தை சேர்ந்த சுபாகர் (40) என்பவர் வாக்களித்தார். அப்போது அவர் ஆள்மாறாட்டம் செய்து கள்ள ஓட்டு போட்டு இருப்பதாக அங்கிருந்த பூத் ஏஜன்ட் புகார் கூறினார். இதை அடுத்து சுபாகரிடம் தேர்தல் அலுவலர் விசாரணை நடத்தினார்.இதில் அதே ஊரைச் சேர்ந்த ஆல்வின் ராஜா என்பவரின் வாக்கை ஆள்மாறாட்டம் செய்து வாக்குப்பதிவு செய்தது தெரியவந்தது. இதை அடுத்து தேர்தல் அலுவலர் கவிதா இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து சுபா கரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


