காரியாபட்டி, செப். 29 –
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே க.செவல்பட்டி கிராமத்தில் பசுமை நுகர்வோர் தினத்தை முன்னிட்டு காவை தென்இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் சார்பாக மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடும் விழா மாநில பொதுச் செயலாளர் முருகேசன் தலைமையில் காரியாபட்டி நகர் துணைத் தலைவர் பாலமுருகன், நரிக்குடி ஒன்றிய செயலாளர் கணேசன், கணினி இயக்குனர் மாரிச்சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுச் சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருள் மற்றும் கேரிப்பை (நெகிழி) பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்போம் என்ற உறுதிமொழியை எடுத்தனர். அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் தவெக கட்சியின் பரப்புரையில் உயிரிழந்த அனைவருக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவணக்கம் செய்தனர்.
இந்த நிகழ்வின் போது சமூக ஆர்வலர் கருப்பசாமி, ஶ்ரீதேவி, சங்கத்தின் உறுப்பினர்கள் அய்யங்காளை, அழகு மற்றும் பள்ளி சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



