காரியாபட்டி, ஆகஸ்ட் 26 –
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அல்லாளபேரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. மேலும் காரியாபட்டி ஒன்றிய அளவிலான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முதியோர் பென்ஷன், பட்டா மாறுதல், கலைஞர் கனவு இல்லம் திட்டம், மகளிர் சுய உதவிக் குழு கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு குறைகள் குறித்து ஏராளமான மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது.
இதில் வருவாய் துறை, சமூக நலத்துறை, மருத்துவத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டனர். இந்த முகாமில் வட்டாட்சியர் மாரீஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.



