களியக்காவிளை, ஜூன் 29-
களியக்காவிளை அருகே வன்னியூர், தெங்குவிளாகம் வீட்டைச் சேர்ந்தவர் ஜெபராஜ் (50). தொழிலாளி. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் காலில் ஏற்பட்ட காயம் ஆறாமல் இருந்து வந்துள்ளது. மேலும் அதிகளவு மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்ததாம். இதையடுத்து அவரது மனைவி ஆன்றனி செலினா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றாராம். அதன் பின்னர் ஜெபராஜ் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் களியக்காவிளை சந்தை அருகே சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்தவரை அப்பகுதியினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.


