கம்பம்.
தேனி மாவட்டம் கம்பம் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் கிராம கமிட்டி உறுப்பினராக யாதவர் சமுதாயம் சார்பில் 25 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றி ஒத்துழைப்பு நல்கிய பி. முருகேசன் அவர்களுக்கு இன்று பொறுப்பு நிறைவு விழா திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.இதன்படி கிராம கமிட்டி நிர்வாகிகள் மற்றும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பிரார்த்தனை மரியாதை செய்யப்பட்டு கிராம கமிட்டி நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.இந்த விழாவில் சந்திரசேகர், ஓ.ஆர்.நாராயணன்,கே.ஆர். ஜெயபாண்டியன், கே.வி.பி.முருகேசன் எஸ்.கருப்பையா,குப்புராஜ்,கோவில் பூசாரிகள் குமார், கௌசிக்,மற்றும் சிறப்பு பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.