அருமனை, மே 16 –
கடையாலுமூடு நடுநிலைபள்ளி, கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் முஸ்லிம் பள்ளி அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை உடனடியாக அடைக்க வேண்டும் என பெண்கள் போராட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் மூலம் பள்ளி மாணவர்கள் மற்றும் குடும்பம் பாதிக்கப்படுவதாகவும், சாலையில் பெண்கள் மற்றும் பள்ளி செல்லும் கல்லூரி மாணவிகள் நடந்து போக முடியவில்லை எனவும், குடிமகன்கள் குடித்துவிட்டு கடைத்திண்ணையில் உட்கார்ந்து பெண்களை கேலி, கிண்டல் செய்வதோடு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே டாஸ்மாக் கடையை உடனடியாக முட வேண்டும் என பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தமிழ்நாடு அரசும் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.



