மார்த்தாண்டம், செப். 25 –
தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 16-ம் தேதி ஆழ்கடலில் மீன் பிடிக்க வள்ளவிளை பகுதியை சேர்ந்த பிரைட்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கேரளா மாநிலம் பூவார் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் (38) உட்பட 5 பேர் சென்றனர். நேற்று மதியம் கேரளா ஆலப்புழா கடலில் மீன்பிடிக்கும் போது அலெக்சாண்டர் படகில் இருந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
குமரி மீனவர்கள் அவர் உடலை தேங்கா பட்டணம் மீன்பிடித்துறைமுகம் கொண்டு வந்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குளச்சல் மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இன்று கேரளாவில் இருந்து அலக்சாண்டர் உறவினர்கள் வந்து குமரி அரசு மருத்து கல்லூரியில் பிரேத பரிசோதனைக்கு பின் உடல் ஒப்படைக்கப்பட்டது.



