By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒரிசாவில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்த மூன்று பேர் கைது; 28.8 கிலோ கஞ்சா பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > ஒரிசாவில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்த மூன்று பேர் கைது; 28.8 கிலோ கஞ்சா பறிமுதல்
தேனி

ஒரிசாவில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்த மூன்று பேர் கைது; 28.8 கிலோ கஞ்சா பறிமுதல்

Last updated: September 13, 2025 5:03 pm
September 13, 2025
57 Views
Share
SHARE

தேனி, செப். 13 –

ஆந்திரா மற்றும் ஒரிசாவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தும் சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் ஒரிசாவில் இருந்து ஆந்திரா வழியாக தேனி மாவட்டத்திற்கு கடத்திவரப்பட்ட 28.8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் தேனி மதுவிலக்கு காவல் துறையினர் தேவதானப்பட்டி புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த பெண் உட்பட மூன்று பேரை பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சோவு முத்தையா (55) மற்றும் கூடலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (22) என்பதும், அவர்களுடன் இருந்த பெண் ஆந்திர மாநிலம் அனங்கபள்ளி மாவட்டத்தை சேர்ந்த மகாலட்சுமியம்மா என்பதும் தெரிய வந்தது.

மேலும் மூன்று பேரும் விற்பனைக்காக ஒரிசாவிற்கு சென்று ஆந்திரா வழியாக கஞ்சா வாங்கி வந்ததும் தெரிய வந்தது. அவர்களில் சோவுமுத்தையாவிடமிருந்து 16.470 கிலோ, கார்த்திக்கிடமிருந்து 8.250 கிலோ, மகாலட்சுமியம்மாவிடமிருந்து 4.100 கிலோ என மொத்தம் 28.800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மூன்று பேர் மீதும் கஞ்சா வழக்கு பதிவு செய்த தேனி மதுவிலக்கு காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களில் முதலாவது குற்றவாளியான சோவு முத்தையா மீது இதற்கு முன் ஏழு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து தேனி மாவட்டம் மற்றும் கேரளாவில் தொடர்ந்து விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

கம்பத்தில் நிர்வாகி பொறுப்பு நிறைவு பாராட்டு விழா
வாரசந்தையில் அதிகரிக்கும் வழிப்பறி காவலர்கள்
தூர்வாரப்படாத கண்மாய் கனமழையால்
தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு திருத்தேரோட்டத்தினை வடம் பிடித்து துவக்கி வைத்தார்
கணபதி ஹோமம் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

கண்மாயில் மீன்கள் செத்து மிதப்பதால் தொற்று

August 21, 2024
75 Views
மண்டைக்காட்டில் வழிப்பாதை தகராறில் அரிவாள் வெட்டு
தலைவர் சிவ.இளங்கோ 91 வது பிறந்தநாள் விழா
குளச்சல் அருகே சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.94 லட்சம் மோசடி
மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account