திருப்பத்தூர், மே 8 –
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் இன்று உலக செஞ்சிலுவை தின உறுதிமொழியினை அரசு துறை அலுவலர்கள், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், பள்ளி, கல்லூரிகளின் நிர்வாகிகள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்
(பொது) பாபு, மாவட்ட கருவுல அலுவலர் பாண்டியன், திருப்பத்தூர் மாவட்ட கிளை சேர்மன் கிஷோர் பிரசாத், செஞ்சிலுவை சங்க மேலாண்மை குழு உறுப்பினர் முருகன், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், பள்ளி, கல்லூரிகளின் நிர்வாகிகள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.



